இட்லர்களும் சார்லி சாப்ளினும்
எஸ்.வி. வேணுகோபாலன்
எதிரிகளால் ஆபத்தை எதிர்நோக்கும் இட்லர்புறப்படுவானாம்ஒரே நேரத்தில் ஒன்பது கார்களில்.........ஒருவர் போல் மற்றவரிருக்கஉண்மை முகம் இது தான் என்று தெரியாதிருக்க!உலகம் அப்படியேபயணப்பட்டுக் கொண்டிருக்கவில்லைஉலகைக் குலுக்கிய புரட்சியின் புத்திரர்கள்புறப்பட்டு வந்தார்கள்பாசிசத்தின் முகமூடி கிழிக்கஇரவுகளையும் உறவுகளையும்தொலைத்தமனிதகுல எதிரியின்ஆதிக்கச் சிந்தனைகள்குவிமையப்பட்டிருந்தஅதே நெற்றிப் பொட்டில்தான்பின்னொரு வீழ்ச்சிகண்ட நாளில்அவனது துப்பாக்கி முனையைஅவனே பொருத்திச் சுட்டு கொண்டது.இட்லரின் ஸ்வஸ்திகாஇட்லரின் நமஸ்தேஇட்லரின் வன்மம்பழக்கிக் கொண்டவர்கள்ஒரே நேரத்தில் புறப்படுகிறார்கள்குஜராத்தில் - ஒரிஸ்ஸாவில்.... கர்நாடகத்தில்.....பண்பாட்டுக் களத்தில்நிறுத்தப் பட்டிருக்கிறதுஅவர்களது கொடிக்கம்பம் சோமேஸ்வரரை முன்வைத்தும்கிறிஸ்துவனாக சித்தரித்தும்தனது சிலை நிறுவலைத் தடுத்து நிறுத்தியஅவர்களதுஅற்ப கொண்டாட்டங்களால்சற்றும் பாழ்பட்டுவிடாதகுழந்தைமைக் குறும்போடுகைத்தடி சுழற்றி நடக்கிறார் இட்லரையே எதிர்கொண்டசார்லி சாப்ளின்உலக மானுடத்தை நேசிக்கும்பரந்த புன்னகையோடும்ஆதிக்க வெறியர்களைச் சாடும்அதே தீர்மானத்தோடும்........ நன்றி : தீக்கதிர் - இலக்கிய சோலை
சனி, 18 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக